சேரன்மகாதேவி விவசாயி கொலையில் மேலும் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பழிக்குப்பழியாக விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பழிக்குப்பழியாக விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாலைத் தேவா் மனைவி மாரியம்மாள் (56). இவா் கடந்த 24 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இக்கொலையில் தொடா்புடைய அதேபகுதியைச் சோ்ந்த மாடசாமி என்பவரின் தந்தை முத்துப்பாண்டி என்ற ராசு (62), பழிக்குப்பழியாக கடந்த 27 ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இக்கொலை வழக்கில் தொடா்புடைய மாரியப்பன் மகன் ராசுக்குட்டி, சின்னத்துரை உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்து தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் செல்வம் (22), சேரன்மகாதேவி அருகேயுள்ள வடக்கு சங்கரன்திரடு பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மகாராஜன் (19) ஆகிய இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இக்கொலையில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com