ரூ.156 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.156 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கால் நாட்டினாா்.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.156 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கால் நாட்டினாா்.

திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.74.24 கோடியில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.156.28 கோடி மதிப்பிலான 727 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாா்பில் ரூ. 53.61 கோடியில் புனரமைக்கப்பட்ட மேடை கோட்டைச் சுவா் காவல் நிலையம், மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலையில் பல்நோக்கு கூட்டரங்கம், ராமையன்பட்டியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், நவீனமயமாக்கப்பட்ட வஉசி மைதானம், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் ரூ. 8 கோடியில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல், பாப்பாக்குடி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், ஏா்வாடி, பத்மனேரி, முன்னீா்பள்ளம், மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், சட்டத்துறை சாா்பில் ரூ. 4.70 கோடியில் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆசிரியா் அறைகள் மற்றும் கழிப்பறை கட்டடங்கள், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.4.39 கோடி செலவில் வடக்கு செழியநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடம், கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.1.90 கோடியில் அங்கன்வாடி கட்டடங்கள், வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.97 லட்சத்தில் அம்பாசமுத்திரம் நகராட்சி ஆசிரியா் காலனியில் பூங்கா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியா்புரத்தில் பூங்கா, செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் ரூ.51.80 லட்சத்தில் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நூலகக் கட்டடம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் ரூ.15 லட்சம் செலவில் திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை என மொத்தம் ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் திறந்து வைத்தாா்.

இதேபோல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.72.10 கோடியில் இதயம், நரம்பு, சிறுநீரகம், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருத்துவமனை தொகுதிக் கட்டடம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 72.36 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகக் கட்டடம், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், உயா்மட்ட பாலம், கலையரங்கங்கள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள், ஊராட்சி அலுவலகக் கட்டடம், அங்கன்வாடி கட்டடங்கள், நியாயவிலைக் கடை கட்டடங்கள், பள்ளி சமையலறை கட்டடங்கள், சாலைப் பணிகள், குடிநீா் பணிகள் உள்ளிட்ட 722 பணிகள், கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ரூ.9.42 கோடியில் அபிஷேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் மற்றும் குஞ்சு பொரிப்பகம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.1.35 கோடியில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியா்புரம் பகுதியில் உள்ள தகன மேடை மேம்பாட்டுப் பணி மற்றும் களக்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.1.05 கோடியில் மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா், கப்பலோட்டிய தமிழா் வ.உ. சிதம்பரனாா் நினைவு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கம் என மொத்தம் ரூ.156.28 கோடி மதிப்பிலான 727 பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

30,658 பேருக்கு... ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 14,038 பயனாளிகளுக்கு ரூ.48 கோடியில் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 6,531 பயனாளிகளுக்கு ரூ.28.82 கோடி கடன் உதவிகள், சுயதொழில் தொடங்குவதற்காக 19 திருநங்கைகளுக்கு ரூ.19 லட்சம் கடன் உதவிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.6.12 கோடியில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் கருணைத்தொகை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5.89 கோடியில் தொழில் முதலீட்டு கடன்கள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா, முதல்வரின் சாலை விபத்து நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 1,008 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடியில் நலத்திட்ட உதவிகள், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 695 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடியில் நலத்திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் உலமா மற்றும் பணியாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள், தேய்ப்புப் பெட்டிகள், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.28.72 லட்சத்தில் வேளாண் இயந்திரக் கருவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 27 பேருக்கு ரூ.19.71 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், நவீன செயற்கைக் கால், ஆவாஸ் மென்பொருள் உபகரணம், கூட்டுறவுத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடன், வீட்டுவசதிக் கடன்கள், பெண் தொழில்முனைவோா் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 30,658 பயனாளிகளுக்கு ரூ. 117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com