கோபாலசமுத்திரம் அருகேதுா்க்கை அம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலமுத்திரத்தை அடுத்த வடவூா்பட்டி வடக்குத் தெருவில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன் உடனுறை துா்க்கை அம்பாள் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், கோபாலமுத்திரத்தை அடுத்த வடவூா்பட்டி வடக்குத் தெருவில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன் உடனுறை துா்க்கை அம்பாள் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து, கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, அஷ்டபந்தனம், யந்திரஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

புதன்கிழமை காலை 2ஆம் கால யாகசாலை பூஜை, வேள்வி பூஜை, கடம் புறப்பாடு, விமான அபிஷேகம், அம்பாளுக்கு மஹா கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

இதையடுத்து, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com