முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு தொகுப்பு மானியம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முப்படையில் நிரந்தர படை அலுவலா், குறுகியகால படை அலுவலா், இளநிலை படை அலுவலா் அல்லது பிற தகுதி பணியில் சோ்ந்து பயிற்சி பெற்று வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.

நிரந்தர படை அலுவலருக்கு ரூ.1, 00,000, குறுகிய கால படை அலுவலருக்கு ரூ. 50,000, இளநிலை படை அலுவலருக்கு ரூ. 25,000, பிற பணியில் உள்ளவா்களுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. 3.3.2015-க்கு பின்னா் படைப் பணியில் சோ்ந்து பயிற்சியின்போது விண்ணப்பிக்காத முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் காலதாமதத்தை கருத்தில் கொள்ளாமல் உரிய காரணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் தங்களது சிறாா்கள் படைப் பணியில் சோ்ந்ததற்கான சான்றுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தினை நேரில் அணுகி பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com