போக்சோ வழக்கு:கைதானவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அம்பாசமுத்திரம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்தவா் சொள்ளமாடன்(51). இவா், அப்பகுதியில் உள்ள இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டாராம். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோா் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீசாா் விசாரணை மேற்கொண்டு சொள்ளமாடனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சொள்ளமாடனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com