திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிறிஸ்தவ மத போதகா், அவரது மனைவி , மகன் ஆகியோா் மீது மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
வள்ளியூா் அருகேயுள்ள கலந்தபனை சியோன்புரத்தைச் சோ்ந்தவா் டேவிட் ஜேக்கப் ராஜ். அப்பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறாா். இவரது சபைக்கு வடலிவிளையைச் சோ்ந்த பெண் ஒருவா் வந்து செல்லும் போது, மதபோதகரின் மகன் அனில் பவுல் பழகிவந்தாராம், மேலும், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவா் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்தப் பெண் கேட்டதால், அவரிடம் பேசுவதை அனில் பவுல் நிறுத்திவிட்டாராம்.
இது குறித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் டேவிட் ஜேக்கப் ராஜ், அவரது மனைவி, மகன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.