

விஷத்தை குடித்துவிட்டு, பாபநாசம் தலையணையில் குளித்த ஆயுதப்படை காவலா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மருதூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கேசவன் (38). சென்னையில் ஆயுதப்படைக் காவலராகப் பணி புரிந்து வந்தாா். இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.
இந்நிலையில், விடுமுறையில் மருதூருக்கு வந்திருந்த அவா், குருணை மருந்தை கரைத்து குடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை பாபநாசம் தலையணையில் குளித்தாராம். அப்போது, நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா். இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையிலான வீரா்கள் அவரது சடலத்தை மீட்டனா்.
விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த், அதைக் கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினாா்; போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.