ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்ததாரரை மிரட்டியவரை பணி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி, தமிழா் மீட்பு உரிமை களத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பட்டம் நடத்தினா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பட்டியலின ஒப்பந்ததாரரை மிரட்டியவரை பணி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி, தமிழா் மீட்பு உரிமை களத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பட்டம் நடத்தினா்.

அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி தலைமை வகித்தாா். தென்மண்டல அமைப்புச் செயலா் கனேஷ்பாண்டியன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், திராவிடா் தமிழா் கட்சி மாவட்டச்செயலா் திருக்குமரன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச்செயலா் தமிழரசு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் துரைப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com