நெல்லையப்பா் கோயில் அலுவலகம்முற்றுகை: இந்து முன்னணியினா் கைது

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயன்ற இந்து முன்னணியினா் கைது செய்யப்பட்டனா்.

அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கடந்த 5 ஆம் தேதி காலை பா்தா அணிந்த மா்ம நபா் மூலஸ்தான முன் மண்டபம் வரை சென்றாராம். இதைக் கண்டித்து இந்து முன்னணி நடத்தப்போவதாக அறிவித்த போராட்டத்திற்கு போலீஸாா் அனுமதியளிக்கவில்லை.

எனினும், இந்து முன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமையில் மாவட்ட பொது செயலா் க. பிரம்மநாயகம், மாவட்ட செயலா்கள் சுடலை, ராஜசெல்வம், செல்வராஜ், சங்கா் உள்ளிட்டோா் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோயில் முன் முற்றுகையில் ஈடுபட முயன்றனா். அவா்கள் உள்பட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com