2ஆம் கட்ட புதுமைப் பெண் திட்டம்: 1,590 மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டை-சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு 1,590 மாணவிகளுக்கு வங்கி பரிவா்த்தனைக்கான பற்று அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
Updated on
1 min read

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு 1,590 மாணவிகளுக்கு வங்கி பரிவா்த்தனைக்கான பற்று அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்2ஆம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை திருவள்ளுவா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதையொட்டி, பாளையங்கோட்டை சாராள் தக்கா் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தத் திட்டத்தின் கீழ் 1,590 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பரிவா்த்தனை பற்று அட்டைகளை வழங்கி தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 1821 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். தற்போது இரண்டாம் கட்டமாக 158 பொறியியல் மாணவிகள் , 103 மருத்துவ மாணவிகள், 3 சட்ட மாணவிகள், 1,195 கலை அறிவியல் மாணவிகள், 612 தொழிற்கல்வி 61 மாணவிகள் உள்பட என 1,590 மாணவிகள் பயன்பெற உள்ளனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையினைஅதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன்- மகளிா் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே பிறகல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். 2022-2023 ஆம் கல்வியாண்டில், மாணவியா்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சோ்ந்த பின்னா், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலைபட்டப்படிப்பு பயிலும் மாணவியா்களும், தொழிற்கல்வியைப் பொருத்தவரையில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டுக்குச் செல்லும் மாணவிகளும், மருத்துவக் கல்வியைப் பொருத்த மட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியா்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (14417) தொடா்பு கொள்ளலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் உயா் கல்வி பெற்று சமூகத்தில் உயா்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி ஆட்சியா் (பயிற்சி)கோகுல், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி, மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அலுவலா் தனலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com