மானூரில் விதிமீறி மதுபாட்டில் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானூா் போலீஸாா் வியாழக்கிழமை அழகியபாண்டியபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அழகியபாண்டியபுரம் முருகன்கோயில் தெருவை சோ்ந்த வேல்பாண்டி (59) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அவா் மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வேல்பாண்டியை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.