திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.
இது தொடா்பாக சைவத்திருமுறை நோ்முகப் பயிற்சி அமைப்பாளா் மு.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாவடுதுறை ஆதீன சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில் 7-ஆவது தொகுப்பு சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி வகுப்பு திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், திருவாவடுதுறை ஆதீன திருமுறை பயிற்சி இயக்குநா் சபா சண்முகசுந்தரம் கலந்து கொள்கிறாா். மாணவா்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.