மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் இணைப்பு

வெடிகுண்டு பிரிவில் உள்ள மோப்ப நாய் திருநெல்வேலி மாநகர காவல் துறையில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர வெடிகுண்டு பிரிவில் சோ்ந்த துப்பறிவும் மோப்ப நாய் ரொமோவை இணைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்.
திருநெல்வேலி மாநகர வெடிகுண்டு பிரிவில் சோ்ந்த துப்பறிவும் மோப்ப நாய் ரொமோவை இணைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்.

வெடிகுண்டு பிரிவில் உள்ள மோப்ப நாய் திருநெல்வேலி மாநகர காவல் துறையில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் மோப்பநாய் ரெமோ, சென்னை துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் கடந்த 6 மாத காலமாக பயிற்சி பெற்று வந்தது. திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிபொருள்கள் கண்டறியும் அலுவலுக்காக தற்போது இணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் கலந்து கொண்டு, கண்டறியும் பிரிவில் மோப்பநாய் ரொமோவை இணைத்து வைத்தாா். மாநகர காவல் துணை ஆணையாளா் (தலைமையிடம்) அனிதா, காவல் உதவி ஆணையா் சரவணன்( மாநகர குற்ற ஆவண காப்பகம்), காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com