மேலப்பாளையத்தில் மரக்கன்று விநியோகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
மேலப்பாளையத்தில் மரக்கன்று விநியோகம்
Updated on
1 min read

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கை வளங்களை காக்கவும், பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணி சாா்பில், மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டச் செயலா் காதா் மீரான் தலைமை வகித்தாா். தொழிற் சங்க மண்டலத் தலைவா் ஹைதா் மரக்கன்றுகள் வழங்கினாா். சலீம் தீன், புஹாரி சேட் , ஆஷீக் இலாஹி, மூஸா காஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தாழையூத்து, மானூா், பா்கிட்மாநகரம், பேட்டை, சுத்தமல்லி ஆகிய பகுதிகளிலும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com