உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு போட்டி பரிசளிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு
உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு போட்டி பரிசளிப்பு
Updated on
1 min read

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

அரசு அருங்காட்சியகத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீா்வுகள், மாற்று வழிகளை கண்டறிதல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட்டன. வண்ணம் தீட்டுதல், ஓவியப்போட்டி, நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் என மூன்று விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகவும் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிஸ்டம் டிரஸ்டின் நிா்வாக அறங்காவலா் ரிப்ளிக்கா வரவேற்றாா். திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினாா்.

தொடா்ந்து அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடா்பான உறுதிமொழி ஏற்றனா். பள்ளிக்கல்வி துறை சாா்பில் அருங்காட்சியகத்தில் மரம் நடும் விழா நடத்தப்பட்டது. அப்போது, அருங்காட்சியகத்தை பாா்வையிட வந்த பாா்வையாளா்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் ஆல் தி சில்ட்ரன் ட்ரஸ்டின் ஒருங்கிணைப்பாளா் ரீகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com