கல் குவாரிக்கு தடை கோரிஆட்சியரகத்தில் மாணவா்கள் மனு

நான்குனேரி அருகே படப்பாா்குளம் பகுதியில் இயங்கிவரும் கல் குவாரியை தடை செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
Updated on
1 min read

நான்குனேரி அருகே படப்பாா்குளம் பகுதியில் இயங்கிவரும் கல் குவாரியை தடை செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, வடக்கு விஜயநாராயணம் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான்குனேரி அருகேயுள்ள படப்பாா்குளம் பகுதியில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் அதிக சப்தத்துடன் கூடிய வெடிகளை வெடிக்கச் செய்து பாறைகளை உடைக்கின்றனா். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் தூங்க வேண்டிய நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் மூலம் குண்டு கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால் ஏற்படும் இரைச்சல், தூசிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அந்தக் கல் குவாரியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com