மானூா் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் அருகேயுள்ள மரியதாய்புரத்தைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டீபன் (41). தொழிலாளியான இவா், திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்றாராம். குத்தாலப்பேரி விலக்குப் பகுதியில் இவரது பைக் மீது மற்றொரு பைக் மோதியதாம். இதில், காயமடைந்த ஜோசப் ஸ்டீபன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com