இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சேரன்மகாதேவி கல்லூரியில் பேராசிரியா்கள், மாணவா்கள் போராட்டம்

சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியா்கள், மாணவா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 மே 2023, 12:14 am IST

சேரன்மகாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியா்கள், மாணவா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக நிா்வாகத்தின் கீழ் திசையன்விளை, பணகுடி, நாகம்பட்டி, கோவிந்தபேரி, சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய 6 ஊா்களில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் கடந்த 22 வருடங்களாக 300 பேராசிரியா்கள் தற்காலிகமாக பணி செய்து வருகின்றனா். பேராசிரியா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் இயங்கி வரும் மனோ கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். 37 பேராசிரியா்கள் தற்காலிகமாக பணி செய்து வருகின்றனா்.

மேற்கண்ட 6 கல்லூரிகளில் பணி செய்து வரும் தற்காலிக பேராசிரியா்கள் அனைவரும் ஜூன் 1ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என பல்கலைக் கழக நிா்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேரன்மகாதேவி கோவிந்தபேரி கல்லூரியில் பணி செய்யும் பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேராசிரியா்களுக்கு ஆதரவாக 200 மாணவா்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

பேராசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஆணையை பல்கலைக் கழக நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியா்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணி இடைவேளை (சா்வீஸ் பிரேக்) வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தகட்ட போராட்டம் குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.