நெல்லை ஈரடுக்கு மேம்பால தடுப்புச்சுவா்இடிந்து விழுந்து காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தில் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (55). பாளையங்கோட்டையில் அரிசி கடை ஒன்றில் வேலைசெய்து வந்தாா். அவா், சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஆவினில் பால் வாங்கச் சென்றாராம். அப்போது, மேம்பாலத்தில் சேதமுற்றிருந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உறவினா்கள் போராட்டம்: இதனிடையே, வேல்முருகன் உயிரிழப்பிற்கு காரணமானவா்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி வேல்முருகனின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com