முக்கூடலில் தாமிரவருணி ஆற்றில் அருள்மிகு முத்துமாலையம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் தன்னாா்வ தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
இப்பணியை பேரூராட்சி 14ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சிந்துஜா முத்துசாமி தொடங்கி வைத்தாா். முக்கூடல் குரு டீம் அமைப்பின் கதிரேசன், ஹரிராம் சேட் நற்பணி மன்றத்தினா் பசுபதி, முத்துசாமி, அரவிந்தன், நவீன், ராம்மோகன், துரை, மணி, கல்லிடைக்குறிச்சி லூா்து மற்றும் தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில், ஒரு டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.