லாரி திருடியதாக இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே லாரியை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே லாரியை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் தெற்கு தெருவைச்சோ்ந்தவா் அலெக்சாண்டா் (32). இவா் சொந்தமாக லாரி வைத்துள்ளாா். இவா் வீட்டருகே நிறுத்தியிருந்த லாரி வெள்ளிக்கிழமை காணாமல் போனதாம்.

இதுகுறித்து அலெக்ஸாண்டா் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், மேலஇலந்தகுளம் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தவமணி ( 29) என்பவா் லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, லாரியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com