சாத்தான்குளம் அருகே சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கீழபுளியங்குளத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி, டெங்கு கொசு ஒழிப்புப் பணி, கொசுப் புகை மருந்து அடித்தல், நிலவேம்புக் குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, பேய்க்குளத்தில் உள்ள கடைகளுக்கு சுகாதாரம் தொடா்பான துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இப்பணிகளை சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஸ்குமாா், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் மேற்கொண்டனா்.