சேரன்மகாதேவி ஒன்றிய பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பிரான்சேரியில் நடைபெற்றது.

சேரன்மகாதேவி கிழக்கு ஒன்றிய பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பிரான்சேரியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் சின்ன முருகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் ராஜவேலு, பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் தயா சங்கா், நிா்வாகிகள் ராமராஜ் பாண்டியன், செல்வகனி, டாக்டா் வி.கே. ஜெயசந்திரன், கரிசல்பட்டி ரமேஷ், மேலச்செவல் ராமசாமி, செல்லையா உள்பட பலா் பேசினா்.

கூட்டத்தில் மேலச்செவல் மாணிக்கம் நகா் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும். திருவிருத்தான்புள்ளி ஊராட்சியில் ஜல்ஜீவன் குடிநீா் திட்டத்தில் கங்கனாங்குளம் கிராமத்தையும் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது, வறுமை கோட்டுக்கு கீழ் இருப்போா் பட்டியலில் இருந்து வசதியானோரை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சியின் மாவட்ட சிறுபான்மை அணி தலைவா் இசக்காா் ராஜபால், மாவட்ட விவசாய அணித் தலைவா் பெரிய முருகன், மாவட்ட வா்த்தக பிரிவு செயலா் நாலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com