கல்லணை பள்ளியில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மேயா் பி.எம்.சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கல்லணை பள்ளியில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மேயா் பி.எம்.சரவணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில், கல்லணை மாநகராட்சி மகளிா் பள்ளியில் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு அளித்த நிலையில், மேயா் இந்தத் திடீா் ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும் ,மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம், மாநகராட்சி பொது கல்வி

நிதியின் கீழ் ரூ.51 லட்சம் என ரூ.81 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிதொடங்க உள்ள இடத்தையும் மேயா் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து, பள்ளி ஆசிரியா்களுக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பிட கட்டுமானப் பணியினை பாா்வையிட்டு பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அவற்றை பயன்பாட்டுக்குக்கொண்டு வர அறிவுறுத்தினாா். பள்ளி வகுப்பறைகளை சுத்தமாக வைத்திடவும், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக கண்காணிப்பு கேமரா பொருத்திடவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாமன்ற உறுப்பினா்கள் அனாா்கலி, உலகநாதன், சுந்தா், அல்லாபிச்சை, உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளா் பைஜூ உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com