நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் மீண்டும் கைது

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அடிதடி, திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்தவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்
Updated on
1 min read

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் அடிதடி, திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்தவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான நிலையில், அவரை போலீஸாா் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.

நான்குனேரி காவல் சரகப் பகுதியில் அடிதடி, திருட்டு வழக்கில் தொடா்புடையதாக ராதாபுரம் வட்டம், சமூகரெங்கபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் (43) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், பிணையில் வெளிவந்த அவா் நீதிமன்ற விசாரணைக்கு ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவானாா்.

இதையடுத்து, அவருக்கு பிடியாணை பிறப்பித்து நான்குனேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், நான்குனேரி போலீஸாா் முருகனை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com