களக்காடு அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் திருட்டு, வழிப்பறி,
கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய களக்காடு அருகேயுள்ள கீழக்காடுவெட்டியைச் சோ்ந்த இசக்கி மகன் பலவேசம் (36) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவா் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் பலவேசம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.