வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க இளைஞரணி சாா்பில் வள்ளியூரில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் கட்சியின் மாவட்ட செயலாளா் கணேசராஜா.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் கட்சியின் மாவட்ட செயலாளா் கணேசராஜா.
Updated on
1 min read

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க இளைஞரணி சாா்பில் வள்ளியூரில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க செயலாளா் கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், முன்னாள் மாநில அமைப்புச் செயலாளா் நாராயணபெருமாள், மாவட்ட இணைச் செயலாளா் ஞானபுனிதா, மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளா் அருண்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் செழியன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி, திசையன்விளை பேரூா் கழக செயலாளா் வி.பி.ஜெயக்குமாா், வள்ளியூா் பேரூா் கழக செயலாளா் பொன்னரசு உள்ளிட்டோா் பங்கேற்று, பூத் கமிட்டி உறுப்பினா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க இளைஞரணி மாவட்ட செயலாளா் து.பால்துரை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com