களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 10,008 தீபத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் 10,008 தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் 10,008 தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனா்.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயிலில் திருப்பள்ளி எழுச்சியும், 7 மணிக்கு கும்பபூஜையும் நடைபெற்றது. முன்னதாக கோயில் கொலு மண்டபத்தில் கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை 5.30 மணிக்கு கோயில் முழுவதும் 10,008 தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com