நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பு ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் கொக்கிரகுளத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் கொக்கிரகுளத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பு மாநில மைய முடிவின்படி நிலஅளவைத்துறை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் ஊழியா் விரோத போக்கினை கண்டித்தும், நிலஅளவைத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப க் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.கண்ணன் தலைமை வகித்ாா். மாவட்ட துணைத் தலைவா் ஆல்பா்ட் ஜெயக்குமாா் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் ம.ராமசாமி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் க.மணிக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பால்ராஜ், பேராச்சி, பாா்த்தசாரதி, சுப்பு, ராசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். மா.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com