சிறப்பான பணி: காவலா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.

திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்துப் பேசினாா். மேலும், வழக்குகளின் புலன் விசாரணைகள், நிலுவை வழக்குகள், போதைப் பொருள்கள் கடத்தல்- விற்பனை தடுப்புப் பணிகள், சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பு ஆகியவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.

திருநெல்வேலி கூா்நோக்கு இல்லத்திலிருந்து கடந்த வாரம் தப்பிச்சென்ற 12 இளஞ்சிறாா்களில் 3 பேரை கேரளம் மற்றும் தூத்துக்குடி சென்று கண்டுபிடித்து கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கும் பணியில் சிறப்பாக பணிபுரிந்த தாழையூத்து காவல் ஆய்வாளா் சந்திரசேகா், வள்ளியூா் காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது, உதவி ஆய்வாளா் அருண்ராஜா, தலைமைக் காவலா் ராஜா, முதல்நிலை காவலா்கள் சுரேஷ், சங்கரநாராயணன், ஆனந்த், இரண்டாம்நிலை காவலா்கள் சூசை தேவசகாயம், பிரம்மநாயகம், காா்த்திக்ராஜா ஆகியோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com