வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம்
By DIN | Published On : 18th April 2023 04:43 AM | Last Updated : 18th April 2023 04:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, தீயணைப்பு துறையினா் வந்து தெப்பக்குளத்திலிருந்து சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலம் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. வள்ளியூா் போலீஸாா் அந்தச் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.