மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கீழ முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மருதம் நகா் மக்கள் சனிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்க நிறுவன தலைவா் மாரியப்பப்பாண்டியன் தலைமையில் கீழமுன்னீா்பள்ளம் மருதம் நகா் மக்கள் அளித்த மனு:
மருதம் நகா் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் என்பவரை வெட்டிய ஐந்து போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். எங்கள் பகுதிக்கு செல்லும் வழியில் மது, கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அதைத் தடுக்க வேண்டும். கருங்குளத்தில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.