திருநெல்வேலி அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ நிறைவு நிகழ்ச்சியாக சித்திரை 3 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமாா் 300 கிலோ அளவில் பல ரக மலா்கள் பெருமாளின் பாதங்களில் படைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இறுதியில் மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்றனா்.