ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரிஆசிரியா் நலச் சங்கம் போராட்டம்

ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தமிழகத்தில் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் அதேநாளில் அதே விகிதத்தில் வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.1 லட்சமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.நெல்லையப்பன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.நல்லையா, முத்துப்பிள்ளை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சந்திரா வரவேற்றாா். ப.பாலகிருஷ்ணன் விளக்கிப் பேசினாா். பீட்டா் பொன்னையா, நல்லசிவன், சுப்பிரமணியன், செல்லப்பா, சாத்ராக் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com