திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான லைலதுல் கத்ரு இரவு செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு காஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்கள் புனித ரமலான் மாதத்தையொட்டி நோன்பு இருந்து தொழுகை செய்து வருகிறாா்கள். இந்நிலையில் இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான லைலதுல் கத்ரு இரவு செவ்வாய்க்கிழமை (ஏப். 18) வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.