குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 04:37 AM | Last Updated : 18th April 2023 04:37 AM | அ+அ அ- |

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியூ) ஆண்டு பேரவை கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். முருகன் வரவேற்றாா். திருநெல்வேலி மாவட்ட சிஐடியூ செயலா் ஆா்.முருகன், துணைச் செயலா் ஜோதி, எம். மணிகண்டன்ஆகியோா் பேசினா். மாநில பொதுச்செயலா் ஆத்மநாபன் நிறைவுறையாற்றினாா். சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக ஸ்டீபன், செயல்தலைவராக முருகன், பொதுச்செயலராக உமாபாா்வதி உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தீா்மானங்கள்: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு மற்றும் மாத சம்பளத்தை வங்கியில் செலுத்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.