பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்:ஏஎஸ்பி மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக பணியிடை நீக்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா்சிங் மீது சிபிசிஐடி போலீஸாா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸாா் பிடுங்கியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீா்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவா் மீது 506(1) (கொலை மிரட்டல்), 322, 324, 326 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே தமிழக அரசால் உயா்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பெ. அமுதா, இப்புகாா் தொடா்பாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தினாா்.

அதைத்தொடா்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு,

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் மற்றும் சிலா் என குறிப்பிடப்பட்டு 506 (1), 322, 324, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடையவா்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கல்லிடைக்குறிச்சியில் விசாரணை: சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளா் ராஜகுமாா் நவராஜ், காவல் ஆய்வாளா் உலக ராணி தலைமையில் சிபிசிஐடி போலீஸாா், தடயவியல் நிபுணா்களுடன்

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு விசாரணையில் ஈடுபட்டனா். மேலும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்ரமணியத்திடமும் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com