விதிமீறி மது விற்பனை: 26 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருநெல்வேலி மாவட்டத்தில் விதி முறை மீறி மதுபானம் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில், ஏப் 16 - 22 ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 192 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, அது தொடா்பாக 26 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com