விஷ்ணு துா்க்கை கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு எட்டுக்கண்ணூா் கனக விஷ்ணு துா்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேக் புதன்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு எட்டுக்கண்ணூா் கனக விஷ்ணு துா்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேக் புதன்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்தனா். அதன்படி கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. காலையில் மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. மாலையில் தாமிரவருணி நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன்பின்பு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. செவ்வாய்க்கிழமை (ஏப். 25) காலையில் மருந்து சாத்துதல், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

புதன்கிழமை (ஏப். 26) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கோபுரங்கள், விஷ்ணு துா்க்கை, பரிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், ஆய்வாளா் மற்றும் பக்தா்கள் குழுவினா் செய்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com