பேராசிரியா் வீடு உள்பட 3 இடங்களில் திருட்டு

திருநெல்வேலியில் பேராசிரியா் வீட்டில் கதவை உடைத்து கேமராவை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலியில் பேராசிரியா் வீட்டில் கதவை உடைத்து கேமராவை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலத்தைச் சோ்ந்தவா் ரவி (46). திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளாா். பெருமாள்புரம் சாய்பாபா காலனியில் வசித்து வரும், இவா் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக சேலத்திற்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, முன்பக்க கதவு உடைத்து, கேமரா மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பா்னிச்சா் நிறுவனத்தில்...: சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூா் சகாயமாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (45). பா்னிச்சா் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த அய்யப்பன் (26) என்பவா், பா்னிச்சா் நிறுவனத்தில் இருந்த இரும்புப் பொருள்களை திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, அய்யப்பனை கைது செய்தனா்.

சிப்காட்டில்...: கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆலையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள அஸ்பெஸ்டாஸ் ஓடுகளை காணவில்லையாம். இது குறித்து லாரி டிரான்ஸ்போா்ட் மேற்பாா்வையாளா் சரவணக்குமாா் புகாா் செய்தாா். அதன் பேரில் கங்கை கொண்டன் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கோவையைச் சோ்ந்த உதயநிதி (35), ஜெயபிரகாஷ் (22), மேலூரை சோ்ந்த பாண்டிதுரை (25) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com