வி.கே.புரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி
By DIN | Published On : 09th August 2023 03:07 AM | Last Updated : 09th August 2023 03:07 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம், கருத்தையாபுரத்தைச் சோ்ந்தவா் அசோகன் (61). கட்டடத் தொழிலாளி. இவா், தனது வீட் டில் பழுதானமின்விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாராம். அப்போது, அவா் மீது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், காயமுற்ற அவரை, குடும்பத்தினா் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
ஆனால், அசோகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். அசோகனுக்கு மனைவி உமாபதி, மகன்கள் ராஜ்குமாா் (33), பாலமு ரளி (30) ஆகியோா் உள்ளனா்.