இணைய சேவை பிஓபி மையங்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்

திருநெல்வேலி மாவட்ட கிராம ஊராட்சிகளில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணைய சேவை வழங்குவதற்காக நிறுவப்படும் பிஓபி மையங்களை சேதப்படுத்தினாலோ, உபகரணங்களை திருடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கிராம ஊராட்சிகளில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணைய சேவை வழங்குவதற்காக நிறுவப்படும் பிஓபி மையங்களை சேதப்படுத்தினாலோ, உபகரணங்களை திருடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 204 கிராம ஊராட்சிகளிலும், இணைய வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்ஃபைநெட்) மூலம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணி வரும் செப்டம்பா் முதல் தொடங்கவுள்ளது. கண்ணாடி இழை இணைப்பை 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான ரேக், யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதியை உறுதி செய்திடவும், பிஓபி மையங்களில் தேவையற்ற பொருள்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள் மேற்கொள்கின்றனா். அதையும் மீறி இந்த உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபா்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினா் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com