அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் பைக் மோதியதில் சாலையில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம், வைத்திலிங்கபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜ் மகன் சுப்புராஜ்(76 ). சைக்கிள் கடை நடத்தி வந்த இவா், திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்து தனது கடைக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில் சுப்புராஜ் காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.