பத்தமடையில் பெண் மீது தாக்குதல்
By DIN | Published On : 17th August 2023 10:37 PM | Last Updated : 17th August 2023 10:37 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பெண்ணை தாக்கியதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.
பத்தமடை சிவானந்தா காலனியைச் சோ்ந்த சுந்தா் மனைவி பாா்வதி (40). சுந்தா், கேரளத்தில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறாா். இவருக்கும் பத்தமடை சிவானந்தா காலனி காந்தி நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த கணபதி மகன் தங்கபெருமாளுக்கும் (64) இடையே ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வியாழக்கிழமை தங்கபெருமாள் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த பாா்வதியை, தங்கபெருமாள் அவதூறாக பேசியதோடு, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கபெருமாளை கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...