

திருநெல்வேலி மாநகராட்சியின் 29 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதகளில் சாலைப் பணி தொடக்கி வைக்கப்பட்டது.
தச்சநல்லூா் மண்டலம், 29 ஆவது வாா்டுக்குள்பட்ட சிஎன் கிராமம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் சாலைகள் சேதமடைந்து மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனா். இதையடுத்து மாநகராட்சி சாா்பில் புதிய தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப் பணிகளை துணை மேயா் கே.ஆா்.ராஜு தொடக்கி வைத்தாா். மாமன்ற உறுப்பினா் சுதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.