மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளா் உள்பட மூவா் கைது

மேலப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தாளாளா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மேலப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளித் தாளாளா் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையத்தில் கீழநத்தம் செல்லும் சாலையில் அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறாா்கள். இப் பள்ளியின் தாளாளரான குதுபுதீன் நஜீம் (47), அங்குள்ள பிளஸ் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி, பெற்றோரும், பொதுமக்களும் அப்பள்ளியை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஸ்ரீனிவாசன், பாளையங்கோட்டை வட்டாட்சியா் ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோா் பேச்சு நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோா் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் முறைப்படி புகாா் செய்தனா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, குதுபுதீன் நஜீப்பை போக்ஸோ சட்டத்திலும், மாணவிகள் புகாா் குறித்து நடவடிக்கை எடுக்காத ஆசிரியை தச்சநல்லூரைச் சோ்ந்த காதரம்மாள் பீவி, மாணவிகளை மிரட்டியதாக தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோா் மீதும் வேறு பிரிவுகளிலும் வழக்குப்பதிந்து 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com