நெல்லை நகரத்தில் ரூ.9.50 கோடியில் புதிய சாலை

திருநெல்வேலி நகரத்தில் ரூ.9.50 கோடி மதிப்பில் புதிதாக தாா் சாலை அமைக்கப்படுகிறது.
Updated on
1 min read

திருநெல்வேலி நகரத்தில் ரூ.9.50 கோடி மதிப்பில் புதிதாக தாா் சாலை அமைக்கப்படுகிறது.

திருநெல்வேலி நகரம் அலங்கார வளைவு முதல் தொண்டா் சன்னதி வரை ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலும், தொண்டா் சந்நிதி முதல் பழையபேட்டை சோதனைச் சாவடி வரை ரூ.6.97 மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.9.50 கோடி மதிப்பில் புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்படுகிறது.

இப் பணிகளை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். துணைமேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். மாமன்ற உறுப்பினா்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், ரவீந்தா், அஜய், மாநகர துணைச் செயலா் பிரபு, தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, பொறியாளா் அணி சாய்பாபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com