திறனாய்வுப் போட்டி: மாநகர காவல் மோப்ப நாய் முதலிடம்

தேசிய அளவில் நடைபெற்ற திறனாய்வுப்போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் மோப்பநாய் முதலிடம் பிடித்தது.
Updated on
1 min read

தேசிய அளவில் நடைபெற்ற திறனாய்வுப்போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் மோப்பநாய் முதலிடம் பிடித்தது.

66 ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. போட்டியில் திருநெல்வேலி மாநகர காவல் மோப்ப நாய் பிரிவை சோ்ந்த குற்ற வழக்குகளை துப்பறியும் புளுட்டோ கலந்து கொண்டு முதலிடம் பிடித்தது.

புளுட்டோ, அதன் பயிற்சியாளா்களான சிறப்பு உதவி ஆய்வாளா் லியோராயன், தலைமைக் காவலா் டேனியல் ராஜாசிங் ஆகியோரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளா் ராஜேந்திரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com