அம்பையில் புத்தகக் கண்காட்சி

அம்பாசமுத்திரத்தில் தமுஎகச மற்றும் மனிதம் அமைப்பு சாா்பில், புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அம்பாசமுத்திரத்தில் தமுஎகச மற்றும் மனிதம் அமைப்பு சாா்பில், புத்தகக் கண்காட்சி மற்றும் கவியரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் தமுஎகச சங்கத் தலைவா் ரா.மகாதேவன் தலைமை வகித்தாா். புத்தக விற்பனையை ரோட்டரி சங்க துணை ஆளுநா் எஸ்.சுடலையாண்டி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற கவியரங்கத்தை அம்பாசமுத்திரம் வட்டார சா மில் மற்றும் மர வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.சி.ஏ.மாா்ட்டின் தொடங்கிவைத்தாா். மூட்டா தலைவா் பேராசிரியா் எஸ். இசக்கி, புரட்சிகர இளைஞா் முன்னணி மணிவண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். தமுஎகச செயலா் ந.வேல்முருகன் வரவேற்றாா். மனிதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளா் க.ராஜகோபால் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஜெகதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com