கல்லிடைக்குறிச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில்ஒருவா் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சிவலாா்குளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் வெள்ளைத்துரை (45) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் செந்தில்குமாரின் வேண்டுகோள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசனின் பரிந்துரை ஆகியவற்றின்பேரில், வெள்ளைத்துரையை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க ஆட்சியா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதையடுத்து, வெள்ளைத்துரையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com